சென்னை: கிரிக்கெட் வீரர் டோனி, தமிழில் படம் தயாரிக்க உள்ளார். இதற்கான அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். டோனி தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கியிருக்கிறார். இதன் மூலம் இவர் ரோர் ஆஃ தி லயன், ப்ளேஸ் டு குளோரி மற்றும் தி ஹிடன் டு ஆகிய சின்ன பட்ஜெட் படங்களை தயாரித்திருந்தார். தற்போது டோனி தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் தமிழ் மொழியில் ஒரு படத்தை எடுக்க இருக்கிறார். அந்த படத்தை பல மொழிகளில் அவர் வெளியிட இருக்கிறாராம். அந்த படத்தின் கதையை டோனியின் மனைவி சாக்ஷி எழுதி இருக்கிறார். அந்த கதையை தோனி 3டி வடிவில் எடுக்க இருக்கிறார். இந்த படத்தை ரமேஷ் தமிழ்மணி இயக்க இருக்கிறார்.
