சிரஞ்சீவி பட கதை காப்பியா?: இயக்குனர் ஆவேசம்

சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தின் கதை திருடப்பட்டதாக வெளியான தகவலுக்கு அப்பட இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து ஆச்சார்யா படத்தின் இயக்குனர் அன்வெஷ் ரெட்டி வெளியிட்ட அறிக்கை: ஆச்சார்யா படத்தின் கதை, காப்பி அடிக்கப்பட்டதாக சிலர் கூறுவது உண்மையல்ல. இந்த படத்தின் கதையை கொரட்டலா சிவா எழுதியுள்ளார். படத்தின் கதை என்ன என்பது அவருக்கும் படக்குழுவை சேர்ந்த சிலருக்கு மட்டுமே தெரியும். இது முழுக்க ஒரிஜினல் கதை. எழுத்தாளர்கள் பலர், இது தங்களது கதை என புகார் கூறியிருப்பது ஏற்க முடியாதது. இது பொய் புகார்கள். இதனால் ரசிகர்கள் யாரும் இத்தகைய தகவல்களை நம்ப வேண்டாம். 

Related Stories: