பாரம் படத்துக்கு போஸ்டர் ஒட்டும் மிஷ்கின்

கடந்த ஆண்டு தேசிய விருது பெற்ற படம் பாரம். ஒளிப்பதிவு, ஜெயந்த் சேதுமாதவன். இசை, வேத் நாயர். இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார். படம் குறித்து இயக்குனர் பிரியா கிருஷ்ணசாமி கூறுகையில், ‘இப்போதும் பல ஊர்களில் மறைமுகமாக இருக்கும் தலைக்கூத்தல் என்ற வழக்கத்தை முன்வைத்து கதை எழுதப்பட்டுள்ளது’ என்றார்.

இயக்குனர் மிஷ்கின் கூறும்போது, ‘படத்தை பார்த்தபோது, என்னை நானே செருப்பால் அடித்தது போல் இருந்தது. நான் என்ன படம் எடுக்கிறேன் என்று கூச்சமாக இருந்தது. உடனே என் அம்மா, அப்பா ஞாபகம் வந்தது.

அவர்களை நேரில் பார்க்க ஆசையாக இருந்தது. இந்திய சினிமாவில் முதல் 3 இடங்களில் வைக்க வேண்டிய இப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். எனவே, தமிழகத்தில் உள்ள முக்கியமான நகரங்களில், நானே என் சொந்த செலவில் இந்த பட போஸ்டர் அச்சிட்டு சுவர்களில் ஒட்ட முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

Related Stories: