க்ரைம் திரில்லரில் அஞ்சலி ராய் லட்சுமி

க்ரைம் திரில்லர் கதையாக உருவாக உள்ள படத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி இணைந்து நடிக்க இருக்கிறார்கள். தெலுங்கில் ஆனந்த பைரவி பெயரில் படம் உருவாக உள்ளது. இந்த படத்தை கர்ரி பாலாஜி இயக்குகிறார். இது இவரது இரண்டாவது படமாகும். பாலியல் பலாத்கார சம்பவங்களை கொண்டு க்ரைம் திரில்லர் கதையாக இந்த படம் உருவாக இருக்கிறது.

இதில் அதித் அருண் ஹீரோவாக நடிக்கிறார். 2 ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தின் கதை உருவாகியுள்ளதாம். அந்த ஹீரோயின்கள் வேடத்தில் அஞ்சலி, ராய் லட்சுமி நடிக்கிறார்கள். இருவரின் கேரக்டர்களுக்கும் படத்தில் அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது என்றும் இருவரும் நடிப்பதால் இந்த படத்தை தமிழிலும் வெளியிடும் திட்டமுள்ளது என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories: