மோகன்லால் படத்துக்கு நோட்டீஸ்

கேரளா மாநிலம் கோழிக்கோடில் கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. அவர்களை மருமகள் ஜோலி கொன்றது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து மோகன்லால் நடிக்க கூடத்தாயி என்ற படம் தயாராகவிருக்கிறது.

அதேபோல் டிவி சீரியசில் ஒன்றுக்கு ஜோலி என பெயரிடப்பட்டு ஒளிபரப்பு செய்ய முடிவானது. இதற்கு தடை விதிக்கக் கோரி,  ஜோலி மகன்கள் முனிசிப் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட பட மற்றும் டிவி தொடர் தயாரிப்பாளர்களுக்கு விளக்கம் கேட்டு கோர்ட் நோட்டீஸ் அனுப்பியது.

Related Stories: