கேரளா மாநிலம் கோழிக்கோடில் கூடத்தாயி பகுதியில் வசித்து வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் சந்தேகம் ஏற்பட்டு போலீஸ் விசாரணை நடத்தியது. அவர்களை மருமகள் ஜோலி கொன்றது தெரியவந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்த சம்பவத்தை மையமாக வைத்து மோகன்லால் நடிக்க கூடத்தாயி என்ற படம் தயாராகவிருக்கிறது.