லாரி ஓட்டி நடிக்க கஷ்டப்பட்டேன் -கார்த்தி

கார்த்தி  நடிப்பில் கைதி படத்தை ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்ய,  சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார். நரேன், ரமணா, மரியம் ஜார்ஜ் நடித்துள்ளனர். வரும் தீபாவளியன்று ரிலீசாகிறது. படம் குறித்து கார்த்தி கூறியதாவது: கைதி கதையில் நிறைய சவால்கள் இருப்பதை புரிந்துகொண்டேன்.

எனவே, இந்த படத்தை விட்டுவிடக் கூடாது என்று, அதிக ஆர்வத்துடன் கடுமையாக உழைத்து நடித்துள்ளேன். படப்பிடிப்பு முழுவதும் இரவு நேரத்தில் மட்டுமே நடந்துள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் அதிகமாக இடம்பெறும். ஒவ்வொரு கேரக்டரும் வித்தியாசமாக இருக்கும்.

படத்தில் நான் ஒரு பகுதி மட்டுமே. ஆனால், மல்டி ஹீரோ படம் மாதிரி இருக்கும். லாரி  ஓட்டுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால், இந்த ஷூட்டிங்கில் எனக்கு பழைய லாரியை கொடுத்துவிட்டனர். அப்போதுதான் லாரி ஓட்டுவது என்றால் எவ்வளவு கஷ்டம் என்று தெரிந்துகொண்டேன்.

Related Stories: