மீடூ புகார் நடிகை கண்டிஷனுடன் ரீ என்ட்ரி

தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்த தனுஸ்ரீ தத்தா கடந்த ஆண்டு மீடூ பிரச்னையை எழுப்பினார். இந்தி நடிகர் நானா படேகர் மீது புகார் கூறிய அவர் அதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். தனுஸ்ரீயை தொடர்ந்து பல்வேறு நடிகைகள் தங்கள் மீது நடந்த பாலியல் தொல்லை குறித்து வெளிப்படையாக கருத்துக்கள் தெரிவித்தனர். மீடூ விவகாரம் ஓரளவுக்கு ஓய்ந்திருக்கும் நிலையில் தனுஸ்ரீ தத்தா மீண்டும் நடிக்க வருவதாக தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து தனுஸ்ரீ கூறும்போது, நான் அமெரிக்காவுக்கு அடிக்கடி சென்று வந்துகொண்டிருப்பதால் புதிய படங்களை ஒப்புக்கொள்ளாத நிலையிலிருந்தேன். எனது இந்த பயணங்களுக்கு ஏற்ப அட்ஜெஸ்ட் செய்து கால்ஷீட் கேட்டு வரும் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனக்கு வந்த பட வாய்ப்பு ஒன்றை நான் வேண்டாம் என்று மறுத்திருந்தேன்.

அவர்களிடம் எனது பயண விவரம் குறித்து கூறியபோது அவர்கள் ஏற்றுக் கொண்டதுடன் எனது கால்ஷீட் வசதிக்கு ஏற்ப புதிய ஸ்கிரிப்ட்டுடன் வருவதாக தெரிவித்தனர். அடுத்த வருடம் அந்த ஸ்கிரிப்ட் ரெடியாகிவிடும் என தெரிவித்திருப்பதால் அதில் நடிப்பதாக தெரிவித்துள்ளேன்.

புதிய படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டாலும் மீடூ புகாரில் சிக்கியவர்கள் நடிக்கும் படங்களில் நான் நடிக்க மாட்டேன். இதையொரு கண்டிஷனாகவே வைத்திருக்கிறேன். மீண்டும் நடிக்க வருவதற்கு காரணம் எனது தொழிலை புதுப்பித்துக்கொள்வதற்கு மட்டுமல்ல நல்லதொரு நகரத்தில் பணியாற்ற வேண்டும் என்ற எண்ணமும்தான்’ என்றார்.

Related Stories: