பேட்ட படத்தில் புதுடிரெண்டுக்கு மாறிய சூப்பர் ஸ்டார் ரஜினியின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தர்பார் படத்தில் போலீஸ் அதிகாரியாக வேடமேற்றிருக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ஏற்கனவே படையப்பா, முத்து, லிங்கா படங்களை ரஜினியை வைத்து இயக்கியுள்ள ரவிகுமார் மீண்டும் அவருக்காக புது ஸ்கிரிப்ட் தயாரித்திருக்கிறார்.