நெட்டிசன்கள் விமர்சனத்தால் இணைய தளத்திலிருந்து மாயமான பார்வதி

தமிழ், மலையாள படங்களில் நடித்து வருகிறார் பார்வதி. சசி இயக்கிய பூ படத்தின் மூலம் அறிமுகமான இவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதால் அவரது பெயருடன் பட டைட்டிலான ‘பூ’ என்ற பட்டப்பெயரும் ஒட்டிக்கொண்டது. கடந்த சில மாதங்களுக்கு முன் மல்லுவுட்டில் பெண்கள் மீதான மீடூ பிரச்னை எழுந்தபோது அதற்கு ஆதரவாக குரல் கொடுத்தார் பார்வதி. ஒரு கட்டத்தில் நடிகர் மம்மூட்டியை விமர்சித்தார்.

இதனால் நெட்டிஸன்களும், மம்மூட்டி ரசிகர்களும் பார்வதியை கண்டித்து மெசேஜ் வெளியிட்டனர். இதில் நொந்துபோனவர்  இணைய தள டுவிட்டர் பக்கங்களிலிருந்து மாயமானார். 4 மாதமாக எந்த மெசேஜும் பகிராமல் அமைதி காத்தவர் தற்போது மீண்டும் இணைய தள பக்கத்தில் இணைந்திருக்கிறார்.

இந்த தகவலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார் பார்வதி. பிரபல எழுத்தாளர் ஒருவரின் புகழ்பெற்ற வார்த்தைகளை கொண்டு தனது வருகையை பதிவு செய்திருக்கிறார். பார்வதி மீண்டும் இணைய தளபக்கத்தில் இணைந்ததற்கு அவரது ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்திருப்பதுடன் எதிர்காலத்தில் இணைய தளத்தைவிட்டு வெளியேறாமல் தொடர்ந்து கருத்துக்களை வெளியிடுமாறு கேட்டுள்ளனர்.

Related Stories: