ஆன்றோர் அமுத மொழி!

பிள்ளையைப் பெற்றோர், தங்கள் மருமகளைத் தங்கள் வயிற்றில் பிறந்த மற்றொரு பெண்ணாகவே கருதி, அன்பும், பாசமும் காட்ட வேண்டும். தனது பெற்றோர், உற்றோர், உறவினர், உடன்பிறந்தோர் ஆகிய அனைவரையும் ஒரு நொடியில் உதறித் தள்ளிவிட்டு ,கணவர்  என்ற அந்த ஒரேயொரு புது உறவை, தெய்வமாக எண்ணி, புக்ககத்தில் காலடி எடுத்துவைக்கும் மருமகள், மற்றோர் மகளேயாவார்.

தனது விருப்பு - வெறுப்புகள் அனைத்தையும், கணவர் என்கிற அந்தப் புது உறவின் காலடியில் சமர்ப்பித்துவிட்டு, பல கனவுகளுடன் புக்ககத்தில் பிரவேசிக்கும் மருமகளைத் துன்புறுத்துவோர், பல பிறவிகளில் குழந்தைப் பேறின்றி, வயோதிகக் காலத்தில், அன்பும், பாசமும், பாதுகாப்பும்  காட்டுவதற்கு எவருமில்லாமல், ஈமக்கடன்களைக்கூடச் செய்வதற்கு உறவினரின்றி அநாதையாக மரிப்பார்கள்.

-“பூர்வ ஜென்ம நிர்ணய சாரம்'' (புராதன நீதி நூல். தர்ம தேவதையே இயற்றியதாகக் கூறப்படும் நூலாகும்.

Related Stories: