திருமணத்துக்கு பிறகு சினிமாவில் இருந்து விலகியிருந்த ஜெனிலியா, 2022ல் தெலுங்கு படத்தில் மீண்டும் நடிக்க தொடங்கினார். சமீபத்தில் வெளியான ‘சிதாரே ஜமீன் பர்’ என்ற இந்தி படத்தில் ஆமிர் கானுடன் அவர் நடித்திருந்தார். இந்நிலையில் ஜெனிலியா அளித்த ஒரு பேட்டியில், ‘தென்னிந்திய படங்களில் எனக்கு எப்போதுமே மிகச்சிறந்த கதாபாத்திரங்கள் கொடுக்கப்பட்டன. இங்கு எனக்கு கிடைத்த வாய்ப்புகளுக்காக நான் என்றென்றும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நடிப்பு உள்பட பல்வேறு விஷயங்களை நான் கற்றுக்கொண்ட இடம் அதுதான். ஐதராபாத்தில் ஹாசினி என்றும், தமிழில் ஹரிணி என்றும், மலையாளத்தில் ஆயிஷா என்றும் எனது கதாபாத்திரங் களின் வழியாகவே தென்னிந்திய ரசிகர்கள் என்னை நினைவில் வைத்திருக்கின்றனர். அதை நினைத்து எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது’ என்று நெகிழ்ந்தார்.
