இதுகுறித்து அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ‘ரியல் எஸ்டேட் நிறுவனங்களின் விளம்பர தூதராக இருந்த மகோஷ் பாபுவுக்கு மொத்தம் 5.9 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதில், 3.4 கோடி ரூபாய் வங்கி மூலமாகவும், 2.5 கோடி ரூபாய் பணமாகவும் வழங்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறையின் விசாரணையில், பணமாக வழங்கப்பட்ட 2.5 கோடி ரூபாய், மோசடி மூலம் பெறப்பட்ட பணத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மகேஷ் பாபு தனது செல்வாக்கை பயன்படுத்தி, இந்த நிறுவனங்களில் மக்களை முதலீடு செய்ய ஈர்த்ததாகவும், இதனால் மோசடி திட்டங்கள் நம்பகத்தன்மை பெற்றதாகவும் அமலாக்கத்துறை கருதுகிறது’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ரூ.2.5 கோடி மோசடி விவகாரம்: மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை ஆஜராக சம்மன்
