வீரம் என்பது என்ன? பயப்படாத மாதிரி காட்டிக்கொள்வதுதான். சிம்புவுக்கு இணையாக ஆட வேண்டும் என்று, ஒரு பாடல் காட்சியில் வேகமாக ஆடினேன். வைரமுத்துவை மிஞ்சுவதற்காக நான் பாடல் எழுதவில்லை. மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே புதிய மொழியில் ‘ஜிங்குச்சா’ பாடலை எழுதினேன். தாய் 8 அடி பாய்ந்தால். குட்டி 16 அடி பாயும் என்பது சிம்புவுக்கு பொருந்தும். அவரது தந்தை டி.ராஜேந்தருக்கு என்மீது அளவுகடந்த பாசம். எனக்கு ஏதாவது ஒன்று என்றால், என் சட்டையை அழுதே நனைத்துவிடுவார். மேடையில் இருக்கும் கதாநாயகிகள் அபிராமியும், திரிஷாவும் படத்தில் ஒருமுறை கூட என்னிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லவில்லை. தினமும் ‘சார், ஐ லவ் யூ’ என்று சொன்ன ஒரே நபர் நடிகர் ஜோஜூ ஜார்ஜ். அதனால் என் மனதை தேற்றிக்கொண்டேன்.
‘தக் லைஃப்’ படம் கண்டிப்பாக ஓடும். நாங்கள் சினிமாவை காதலிப்பவர்கள். அதனால்தான் இவ்வளவு நம்பிக்கை. நீங்கள் கேட்கும் எல்லா விஷயங்களும் இருக்கும். ஆனால், வேறுமாதிரி இருக்கும். போன தீபாவளிக்கு போட்ட சட்டையையே இந்த தீபாவளிக்கும் போடுவீர்களா? பார்த்து பழகிய சினிமாவையே மீண்டும் பார்ப்பீர்களா? அதனால்தான் ‘தக் லைஃப்’ படத்தை வேறுமாதிரி உருவாக்கியுள்ளோம். இவ்வாறு கமல்ஹாசன் பேசினார். பிறகு மணிரத்னம், ஏ.ஆர்.ரஹ்மான், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ் ஆகியோரும் பேசினர்.