அந்த அறிக்கையில், ‘‘நடிகர் ஸ்ரீ மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளார். தற்போது மருத்துவரின் ஆலோசனையைப் பின்பற்றி சமூக ஊடகங்களில் இருந்து சிறிது நேரம் ஓய்வு எடுத்து வருகிறார். ஸ்ரீயின் உடல் நிலை குறித்த தவறான தகவல்களை பரப்ப வேண்டாம், அது அவரது மனநிலையை பாதிக்கக்கூடும். ஸ்ரீயின் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவதூறு பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஸ்ரீ நடிப்பில் மாநகரம் படத்தை இயக்கிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஸ்ரீயின் உடல்நிலை தொடர்பான நேர்காணல்களையும், ஆட்சேபத்துக்குரிய கருத்துகளையும் ஊடக தளங்களில் இருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்” என தெரிவித்துள்ளார்.
நடிகர் ஸ்ரீக்கு தீவிர மருத்துவ சிகிச்சை: வதந்திகளை பரப்ப வேண்டாம் குடும்பத்தினர் அறிக்கை
