வில்லனாக வந்து, திடீரென்று திருந்தும் டாக்டர் சூர்ய நாராயணன் கவனத்தை ஈர்க்கிறார். பெற்றோராக சூப்பர் குட் சுப்பிரமணி, ஸ்ரீபிரியா மற்றும் பால்ராஜ், மாரியப்பன், சிவவேலன், ரஷ்மிதா, சாவித்திரி ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர். சின்ராஜ் கேமரா வறண்ட பூமியையும், வெள்ளந்தி மக்களையும் யதார்த்தமாக பதிவு செய்துள்ளது. விபின்.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கேற்ப பயணித்துள்ளது. நெய்வேலி பாரதிகுமாரின் வசனம் யதார்த்தம். சில குறைகள் இருந்தாலும், மனிதநேயத்தை வலியுறுத்திய இயக்குனர் இரா.தங்கபாண்டியை பாராட்டலாம.
மாடன் கொடை விழா – திரை விமர்சனம்
