லவ்லின் சந்திரசேகர், விஜி சந்திரசேகர், ரிஷிகாந்த், ஏகன், விக்னேஷ்காந்த், காவ்யா அறிவுமணி, ஐரா கிருஷ்ணன், முல்லை அரசி, மைம் கோபி, ஆடுகளம் நரேன், சுரேஷ் மேனன், சுரேஷ் சக்ரவர்த்தி போன்றோரும் நன்கு நடித்துள்ளனர். காட்சிகளை இயல்பாக ஒளிப்பதிவு செய்துள்ள மல்லிகா அர்ஜூன், மணிகண்ட ராஜூவின் உழைப்பு திரையில் நேரத்தியாக இருக்கிறது. தேவ் பிரகாஷ் ரீகன் பின்னணி இசை கதையை மீறாமல் பயணித்துள்ளது. எடிட்டர் தமிழ் அரசன் பணி குறிப்பிடத்தக்கது. எழுதி இயக்கியுள்ள பிரிட்டோ ஜே.பி., 4 சம்பவங்களிலும் அம்மா சென்டிமெண்டை மட்டுமே சொல்லியிருக்கிறார். அதை சுவாரஸ்யமாகச் சொல்ல முயற்சித்திருக்கலாம். சம்பவங்களுக்கு இடையிலான பிளாஷ்பேக்குகள் சிறிது குழப்பத்தை ஏற்படுத்தினாலும், தாய்மையின் மேன்மையைச் சொல்கிறது படம்.
நிறம் மாறும் உலகம்: விமர்சனம்
