தேவையான பொருட்கள்:
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:ஜவ்வரிசியை அலசி, 3 மணி நேரம் ஊற வைக்கவும். உருளைக்கிழங்கை, வேகவைத்து, மசித்துக்கொள்ளவும். வேர்க்கடலையை மிதமான தீயில் வறுத்து, தோல் நீக்கி, கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும். ஊறிய ஜவ்வரிசியை, தண்ணீரில்லாமல் நன்கு வடித்து, ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். உருளைக்கிழங்கு, வேர்க்கடலை, பொடியாக அறிந்த பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, எலுமிச்சைச் சாறு, அரிசி மாவு, உப்பு சேர்த்து, ஒன்றாக பிசைந்து கொள்ளவும். ஒரே அளவு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். எண்ணெய்யை காயவைத்து, வடைகளாக தட்டி, 4 அல்லது 5 ஒரே சமயத்தில் பொரிக்கலாம். இருபுறமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும். மண(ய)க்கும் ஜவ்வரிசி வடை தயார்.