* அபிராமி அந்தாதி சக்தி தத்துவம் : 41
உதாரணம் - நீல வண்ணமாய் மா மரம் இருக்காது. குறிப்பாக பிற மரங்களில் இருந்து மாமரத்தை தனித்துப் புரிந்து கொள்வதற்கு உதவும் பண்புகளே மாமரத் தன்மை எனப்படுகிறது.
அந்தத்தன்மையையே ‘‘ஒன்றே’’ என்ற வார்த்தையால் அபிராமி பட்டர்’’ குறிப்பிடுகிறார். அதுப் போல் உலகனைத்திலும் உள்ள ஒரே பண்பு அதை சக்தி தத்துவம் என்று சாத்திரங்கள் கூறுகின்றது அந்த ஒன்றே உமையம்மை என்கிறார் அபிராமி பட்டர். அடிப்படையான அந்த ஒன்றின் பல்வேறு பட்ட தன்மையை பல உருவே’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகின்றார்.
இந்த இரண்டு வார்த்தையையும் சேர்த்தே புரிந்து கொள்ள வேண்டும். தனித்துப் புரிந்து கொள்ளுதல் தவறாகும். ‘‘ஒன்றே பல உருவே’’ என்பது அங்கிங் கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிற மற்றும் குறைவு படுத்த முடியாத ஆகாயத்தை (வெற்றிடத்தையே) ஒன்றே என்றும் அந்த வெற்றிடத்தில் தோன்றிய அனைத்தும் பல உருவே என்ற வார்த்தையாலும் குறிப்பிடுகின்றார் இதையே வேதமானது . ‘‘கௌரி மிமாய... பரமே வ்யே மன்’’ என்கிறது இதையே அபிராமி பட்டர் ’’ என்னில் ஒன்றுமில்லா வெளியே’’ என்ற வார்த்தையால் குறிப்பிடுகிறார். ‘‘அருவே என் உமையவளே’’ சாக்த ஆகமங்கள் உமையம்மையை மூன்று வடிவமாக வழிபடுகின்றது. 1. உருவம், 2. அருவம், 3. அருஉருவம் என்று பிரித்து வழிபாடு செய்வர். உருவத்தினால் - போகமும் , அருவத்தினால் - மோக்ஷமும், அரு உருவத்தால்- ஞானமும் வழிபடுவோருக்கு வெவ்வேறு பயனை அடையும் பொருட்டு வழிபாடு செய்யப்படுகிறது.‘‘பல உருவே’’ என்று உருவ வழிபாட்டையும் அருவே என்பதனால் அருவ வழிபாட்டையும்என் உமையவளே என்பதனால் அரு உருவ வழிபாட்டையும் விளக்குகிறார் பட்டர். ‘‘ஆத்தாளை எங்கள் அபிராம வல்லியை அண்டமெல்லாம் பூத்தாளை மாதுளம் பூநிறத்தாளை புவி அடங்கக் காத்தாளை அங்குச பாசாங்குசமும் கரும்பும் அங்கே. சேர்த்தாளை முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே’’ நூற் பயன் என்று உருவ வழிபாட்டையும்....‘‘ கிளைஞர் மனத்தே கிடந்து கிளர்ந்து ஒளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கு இடமே எண்ணில் ஒன்றும் இல்லா வெளியே வெளிமுதற் பூதங்களாகி விரிந்த அம்மே அளியேன் அறிவு அளவிற்கு அளவானது அதிசயமே’’ - 16அருவ வழிபாட்டையும்,‘‘ஒளி நின்ற கோணங்கள் ஒன்பதும் மேவி உறைபவளே’’ -19‘‘எங்கள் சங்கரனார்’’- 44 என்ற வார்த்தை களால் சாக்தர்களால் வழிபடக் கூடிய சந்திர மௌளீஸ்வரர் என்ற விக்ரகத்தையும் மற்றும் ஸ்ரீசக்ர வடிவத்தையும் அரு உருவ வழிபாட்டையும் குறிப்பிடுகின்றார்.இச்செய்யுளை பொறுத்தவரை ‘‘அருவே’’ என்ற வார்த்தை உமையம்மையானவர் பஞ்ச பூதங்களாக தோன்றுகிறாள் என்பதையும், ‘‘என் உமையவளே’’ என்ற வார்த்தையால் ஸ்ரீ வித்யா உபாசகர்கள் தான் மட்டுமே வழிபடக் கூடிய பிறர் அறியா வண்ணம் மறைத்து வழிபடும் ஸ்ரீசக்ரம் முதலான குருவருளினால். திருவருள் கூடி அமைத்து ஆராதிக்கப்படும் ஆத்மார்த்த விக்கிரஹத்தைக் குறிக்கும். பொதுவாக கோயில்களில் அமைந்த இறை திருமேனிகளைக் குறிக்காது. வீட்டில் வழிபடப்படுவதும் கையளவே உள்ளதும் மந்திரம் பொறுத்து அமையும். தினசரி ஆராதிக்கப்படும் சிறிய வடிவத்தை ‘‘என்’’ என்ற வார்த்தை சேர்த்து உபயோகிப்பது சாக்தர்களின் வழக்கம் அந்த வகையில் ‘‘என் உமையவளே’’ என்ற வார்த்தை அபிராமி பட்டர் தான் தனக்காக தன் வீட்டில் வழிபாடு செய்த திரு உருவத்தையே ‘‘என்’’ என்ற சொல் சேர்த்து ‘‘என் உமையவளே’’ (கோயிலில் உள்ள விக்கிரஹம் அல்ல) என்று கூறுகிறார்.ஆத்மார்த்த பூஜைக்காக உள்ள விக்கிரஹம் ஞான சக்தியை மட்டுமே பெற்றுத் திகழும். கோயில்களில் திகழும் விக்கிரஹமானது செயலாற்றல் பெற்றுத் திகழும் (கிரியாசக்தி) உபாசகனானவன் தனக்குள்ளேயிருப்பதாக எண்ணி வழிபடும் மந்திரமானது இச்சா சக்தியை மட்டுமே பெற்றுத் திகழும். இந்த மூன்றும் இணைந்தால் மட்டுமே உபாசகன் தான் எண்ணியதை இறையருள் சக்தியினால் அடைய முடியும்.உதாரணமாய் அபிராமி பட்டர் தான் பெற்ற இறையருளை உலகிற்குக் காட்ட தனக்குள்ளேயிருக்க கூடிய உமையம்மையை வணங்கி அமாவாசையை பௌர்ணமியாக்கியது என்பது இச்சா சக்தியின் அருளால் பெற்றது. ‘‘எண்ணிய எண்ணமன்றோ முன் செய் புண்ணியமே’’ எண்ணியது நிறைவேற சத சூத்திர பிரமாணம் நூறு கயிறுகள் கட்டி அதன் மேல் நின்று கீழே வேள்வி செய்ய வேண்டும் என்ற ஞானத்தை அளிப்பது ‘‘என் உமையவளே’’ என்ற ஆத்மார்த்த மூர்த்தி.தான் எண்ணியதை ஆத்மார்த்த மூர்த்தியின் அருளாரிற ஞானத்தின் வழியாக ஊரெல்லாம் அறிய ஆலயத்தில் இருக்கிற மூர்த்தி செயல்பட்டு அனைவரும் அறிய அனுபவமாக்கும். இம்மூன்று மூர்த்திகளையும் இணைத்தே ‘‘பல உருவே’’ - எண்ணங்களின் வடிவாக இருக்கிறவள். ‘‘அருவே என் உமையவளே’’- என்று மூவரையும் இணைத்து சொல்வதன் மூலமாக தான் எண்ணியதை அனுபவச் சாத்தியப்படுத்திய வழியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். (தொடரும்)முனைவர் பா.இராஜசேகர சிவாச்சாரியார்