நாங்குநேரி: நாங்குநேரி பெருமாள் கோயில் பங்குனி பிரமோற்சவத்தின் 7ம் நாளையொட்டி தங்கசப்பரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது. இதை திரளானோர் தரிசித்தனர். நாங்குநேரி வானமாமலைப் பெருமாள் கோயிலில் பங்குனி மாத பிரமோற்சவ திருவிழா 7 நாட்களாக நடந்து வருகிறது. விழாவையொட்டி தினமும் பெருமாளுக்கும் திருவரமங்கைத் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்து வருகிறது. தினமும் சுவாமி தாயாருடன், கருடன், அனுமன், சிம்மம், ஆளேறும் பல்லக்கு, கருட வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சிகளும் நடந்தன. மதுரகவி வானமாமலை ஜீயர் சுவாமிகள் தலைமையில் திருக்கோஷ்டியினர் திவ்ய பிரபந்த பாடல்களை பாடி பெருமாள் சப்பர வீதியுலாவில் பங்கேற்று வருகின்றனர்.