வாழை தான் எனது சிறந்த படம்: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

சென்னை: ‘மாமன்னன்’ படத்துக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கியுள்ள படம் ‘வாழை’. இதனை நவ்வி ஸ்டூடியோஸ் சார்பில் திவ்யா மாரி செல்வராஜ் தயாரித்துள்ளார். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வழங்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் தொடங்கியது. படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் முடிவடைந்தன.இப்படம் நாளை மறுநாள் திரைக்கு வருகிறது.

கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, பிரியங்கா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னையில் நடந்த ‘வாழை’ படத்தின் புரமோஷன் நிகழ்வில் இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது: ‘வாழை’ படத்துக்குப் பிறகு நான் என்னுடைய பெஸ்ட் ஆக ஒரு படம் இயக்கினாலும் நான் ‘வாழை’ படத்தைத்தான் என்னுடைய சிறந்த படமாக பார்ப்பேன்.

என்னுடைய உச்சபட்ச கண்ணீர் என்றால் அது ‘வாழை’ தான். என்னதான் இவனுக்கு பிரச்சினை என்று நினைப்பவர்களுக்கு நானே என்னை பற்றி சொல்கிறேன் என்று எடுத்தப் படம்தான் இது. இவ்வாறு மாரி செல்வராஜ் பேசினார். இயக்குனர்கள் அமீர், சசி, ராம், புஷ்கர் – காயத்ரி, ராதாமோகன், வெற்றிமாறன், நிதிலன் சாமிநாதன், நடிகர்கள் சூரி, கவின், துருவ் விக்ரம், ஹரிஷ் கல்யாண், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பாளர் எஸ்.தாணு உள்பட பலர் பங்கேற்றனர்.

The post வாழை தான் எனது சிறந்த படம்: மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: