விலங்கு வெப்சீரிஸ் இயக்குனருடன் இணைந்த சூரி

சென்னை: ‘கருடன்’ பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சூரி அடுத்ததாக ‘விலங்கு’ வெப்சீரிஸ் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜுடன் இணைகிறார். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.கடந்த 2017ம் ஆண்டு ஜி.வி.பிரகாஷை வைத்து ‘புரூஸ் லீ’ படத்தை இயக்கினார் பிரசாந்த் பாண்டியராஜ். அடுத்து விமலை வைத்து அவர் இயக்கிய ‘விலங்கு’ வெப்சீரிஸ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் மூலம் பரவலான கவனத்தை ஈர்த்தார் பிரசாந்த் பாண்டியராஜ். இந்நிலையில் அவர் சூரியை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்தப் படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். மேலும் படத்தின் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post விலங்கு வெப்சீரிஸ் இயக்குனருடன் இணைந்த சூரி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: