இந்தநிலையில் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்புலட்சுமி திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு சுமார் 8.45 மணி அளவில் அவர் காலமானார். நடிகை சுப்புலட்சுமியின் உடல் நேற்று திருவனந்தபுரத்தில் உள்ள அவரது பேத்தியின் வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. தொடர்ந்து மாலை திருவனந்தபுரம் தைக்காட்டில் உள்ள மின் மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. சிறந்த பாடகியும், நடனக் கலைஞருமான இவர் 1957ம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பணிக்கு சேர்ந்தார். அப்போது தென்னிந்தியாவில் வானொலியில் முதல் பெண் இசைக் கலைஞர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
The post பிரபல ‘பாட்டி’ நடிகை சுப்புலட்சுமி மரணம் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.