திகில் தொடரில் நடித்ததை மறக்க முடியாது: ஆர்யா

சென்னை: அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகும் தமிழ் திகில் தொடர், ‘தி வில்லேஜ்’. இதில் ஹீரோவாக நடித்துள்ள ஆர்யா கூறியதாவது: ‘தி வில்லேஜ்’ என்ற இத்தொடர் அதே பெயரில் அஸ்வின் ஸ்ரீவத்சங்கம், விவேக் ரங்காச்சாரி, ஷாமிக் தாஸ் குப்தா சேர்ந்து உருவாக்கிய கிராபிக்ஸ் ஹாரர் நாவலால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. தனது குடும்ப உறுப்பினர்களின் பின்னணியில் உள்ள மர்மத்தை அவிழ்க்க முயற்சிக்கும் மனிதனின் கதையை இத்தொடர் விவரிக்கிறது. முதல்முறையாக ஓடிடி தொடரில் நடித்துள்ளேன்.

கவுதம் என்ற கேரக்டரில் வரும் நான், கட்டியல் என்ற கிராமத்தில் வசிக்கும் உள்ளூர்வாசிகளுடன் சேர்ந்து, எனது குடும்பத்தினரை கண்டறியும் மீட்பு பணியில் ஈடுபடுகிறேன். இந்த தொடரில் நடித்தது நிஜமாகவே ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது. கதையும், காட்சிகளும் அதிக சுவாரஸ்யம் கொண்டதாக இருப்பதை அறிந்தேன். இதுபோன்ற அம்சங்கள் என்னை இத்தொடரில் ஈடுபாட்டுடன் பணியாற்ற வைத்தது.

இந்தியாவின் ஓடிடி தளங்களில் காணப்படும் அனைத்து திகில் கதைகளில் இருந்து ‘தி வில்லேஜ்’ தொடர் தனித்துவமாக இருக்கும். பல நேரங்களில் திரைப்படங்களில் நாம் பார்க்கும் திகில், குறிப்பிட்ட எல்லையைக் கடந்ததும் தடை செய்யப்பட்டு விடும். இத்தொடரில் இயக்குனர் மிலிந்த் ராவ் அனைத்து அம்சங்களையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இதுபோன்ற ஜானரிலான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாளிகள் நம்புவதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். ஏனெனில், நம் மக்கள் இந்த ஜானரிலான படைப்புகளை ஓடிடி தளங்களில் பார்த்து ரசிக்க பெரிதும் விரும்புகின்றனர் என்பது பொதுவான உண்மை.

The post திகில் தொடரில் நடித்ததை மறக்க முடியாது: ஆர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: