பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் சூர்யா

நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தையும் சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. அதையடுத்து சூர்யா வெற்றிமாறன் கூட்டணியில் நீண்ட நாட்களாக பேச்சுவார்த்தையில் இருக்கும் வாடிவாசல் திரைப்படம் தொடங்கும் என சொல்லப்படுகிறது.

இதையடுத்து சூர்யா பாலிவுட்டில் நேரடியாக தன்னுடைய முதல் படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை பாலிவுட்டின் முன்னணி இயக்குனர் ராகேஷ் ஓம்ப்ரகாஷ் மெஹ்ரா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் ஒரு புராண கால படம் என சொல்லப்படுகிறது. இந்த படத்துக்கு ஒளிப்பதிவாளராக ரவி வர்மன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. கர்ணா என பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த படம் 2 பாகங்களாக 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

The post பிரம்மாண்ட படத்தின் மூலம் இந்தியில் அறிமுகமாகும் சூர்யா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: