போலீசாரும் ஜரீன் கான் மற்றும் அவரது மேலாளருக்கு எதிராக வழக்குபதிவு செய்தனர். இவ்வழக்கு கொல்கத்தாவின் சீல்டா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. ஜரீன் கானுக்கு எதிராக போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் ஜரீன் கானின் மேலாளர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற்றார். அதேசமயம் ஜரீன் கான் ஒருமுறை கூட விசாரணை நீதிமன்றத்திற்கு வரவில்லை. ஜாமீன் கோரியும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் ஜரீன் கானுக்கு எதிராக நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஜரீன் கானிடம் கேட்டபோது, ‘எனக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் ஒரு துளி கூட உண்மை இல்லை. என் வழக்கறிஞரிடம் பேசிவிட்டு, விவரங்களை தெரிவிக்கிறேன்’ என்றார்.
The post மோசடி வழக்கில் ஆஜராகாததால் நடிகை ஜரீன் கானுக்கு கைது வாரன்ட்: கொல்கத்தா கோர்ட் அதிரடி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.