சில படங்களில் இருவேடங்களில் நடித்திருப்போம். இப்படத்தில் எனக்கு பல வெர்ஷன்ஸ் இருந்தது. வளர்ந்து வரும் நடிகையான எனக்கு இந்த கேரக்டரில் நடிப்பது சவாலாக இருந்தது. கதையோட்டத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலர், ‘ஜானுவை செந்தாழினி மறக்கடித்து விட்டாள்’ என்று பாராட்டினர். இது எனக்கு அதிக மகிழ்ச்சி அளித்துள்ளது. இப்படத்தை தயாரித்த மாலி அண்டு மான்வி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் அடுத்து நான் நடிக்கும் படம், ‘போட்’. சிம்புதேவன் இயக்கத்தில் யோகி பாபு கதை நாயகனாக நடிக்கிறார். தவிர, ‘அடியே’ படத்தின் இயக்குனர் விக்னேஷ் கார்த்திக் இயக்கும் அடுத்த படத்திலும் நடிக்கிறேன். ‘அடியே’ படத்தில் அர்ஜூன், ஜீவா என்ற இருவிதமாக கேரக்டரில் ஜி.வி.பிரகாஷ் குமார் நன்றாக நடித்திருந்தார். படப்பிடிப்புக்குப் பிறகும் கூட நாங்கள் நல்ல நண்பர்களாக இருக்கிறோம்.
The post ஜானுவை மறக்க வைத்த செந்தாழினி: கவுரி கிஷன் நெகிழ்ச்சி appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.