ஆக்‌ஷன் ஹீரோயின் ஆனார் நயன்தாரா

சென்னை: ஜவான் படத்தில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்திருக்கிறார் நயன்தாரா. அட்லி இயக்கத்தில், ஷாருக்கான் நடித்துள்ள படம், ‘ஜவான்’. இதில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு உட்பட பலர் நடித்துள்ளனர். தீபிகா படுகோன் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படத்தை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்.7ம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இந்தப் படத்தில் நயன்தாராவின் தோற்றத்தை ஷாருக்கான் வெளியிட்டுள்ளார். கேப்ஷனாக ‘புயலுக்கு முன் வரும் இடி அவள்’ என்று குறிப்பிட்டுள்ளார். அந்த தோற்றம் அவர் போலீஸ் வேடத்தில் நடிப்பதை உறுதி செய்வதாக இருக்கிறது. இந்நிலையில் இதில் பல்வேறு ஆக்‌ஷன் காட்சிகளிலும் ரிஸ்க் எடுத்து நயன்தாரா நடித்துள்ளாராம்.

The post ஆக்‌ஷன் ஹீரோயின் ஆனார் நயன்தாரா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: