தமிழ் படத்தில் நடிக்கிறேனா?..நாக சைதன்யா பதில்

ஐதராபாத்: அனீஸ் பாஸ்மி இயக்கத்தில் கார்த்திக் ஆர்யன், தபு, கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்த ‘புஹ்ல் புலைய்யா 2’ என்ற இந்தி படம் கடந்த 2022ம் ஆண்டு ரிலீசாகி சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், அந்த இந்தி படத்தை நாக சைதன்யாவை வைத்து ரீமேக் செய்கிறார்கள் என்று தகவல் வெளியானது. ரீமேக்கில் நாக சைதன்யாவுடன் சேர்ந்து ஜோதிகா நடிப்பார் என்றும் கூறப்பட்டது. இந்தியில் தபு நடித்த கதாபாத்திரத்தில்தான் ஜோதிகா நடிக்கிறார் என்று தகவல் பரவியது.

நாகசைதன்யாவுடன் ஜோதிகா நடிக்கும் அந்த படத்துக்கு ‘பிரம்மபுத்ரா’ என்று பெயரிட்டுள்ளதாக பேச்சு கிளம்பியது. இந்நிலையில், இது பற்றி நாகசைதன்யாமேனேஜர் டிவிட்டரில் கூறும்போது, ‘புஹ்ல் புலைய்யா 2’ படத்தின் ரீமேக்கில் நாகசைதன்யா நடிப்பதாக வலம் வரும் தகவல்களில் உண்மை இல்லை. பொய்யான தகவல்களைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார். ‘புஹ்ல் புலைய்யா 2’ இந்தி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி
இருப்பதாக, ஸ்டுடியோ கிரீன் உரிமையாளர் ஞானவேல்ராஜா கூறியிருந்தார்.

The post தமிழ் படத்தில் நடிக்கிறேனா?..நாக சைதன்யா பதில் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: