அதன்படி இப்படம் வரும் 16ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில் பிரபாஸ் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுப்ரபாத சேவையில் பங்கேற்றார். அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சாமி கும்பிட்ட பின் அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டன. தொடர்ந்து கோயிலில் இருந்து வெளியே வந்த அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போலீசார் வந்து, அவரை பேட்டரி வாகனத்தில் ஏற்றி கார் வரை பாதுகாப்பாக அழைத்து சென்று அங்கிருந்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
The post திருப்பதி கோயிலில் பிரபாசை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.