சென்னை: குடியரசுத் தலைவரின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிச்சயமாக நிராகரிக்கும் என திமுக எம்.பி. வில்சன் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவரின் விளக்கம் கேட்டது ஒன்றிய அரசு கூறியது போலவே உள்ளது. சீராய்வு மனு தாக்கல் செய்தால் தள்ளுபடியாகும் என்பதால் ஜனாதிபதி மூலம் ஒன்றிய அரசு செயல்படுகிறது. தீர்ப்பை கண்டிப்பாக மாற்றம் செய்யவோ அல்லது நிறுத்தி வைக்கவோ முடியாது. அரசமைப்பு மீது நம்பிக்கை இல்லாமல் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்பதையே இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார்.
The post குடியரசுத் தலைவரின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரிக்கும்: திமுக எம்.பி. வில்சன் appeared first on Dinakaran.