வரிஇனங்களை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்திடுவீர்

 

திருவாரூர், மார்ச் 24: திருவாரூர் நகராட்சி ஆணையர் தாமோதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: திருவாரூர் நகராட்சி பகுதியில் வசித்து வரும் பொது மக்களுக்கு தேவையான சாலை, குடிநீர், தூய்மை பணிகள் மற்றும் தெருவிளக்குகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் மற்றும் கட்டுமான பணிகள், ஊதியம் உள்ளிட்ட அனைத்திற்கும் நிதி ஆதாரம் என்பது முக்கியமானதாக இருந்து வருகிறது. அதன்படி, இந்த நிதி ஆதாரமானது பெரும்பாலும் வரிவருவாய் மூலம் தான் ஈடுசெய்யப்பட்டு வருகிறது. எனவே பொது மக்கள் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் வரி, பாதாள சாக்கடை வரி, தொழில் வரி, தொழில் உரிமை கட்டணம் வரி, வாடகை மற்றும் குத்தகை கட்டணம் ஆகியவற்றில் நிலுவை இருப்பின் அதனை உடனடியாக செலுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் நீண்ட நாட்கள் நகராட்சிக்கு வரி பாக்கி வைத்திருப்போர் உடனடியாக நிலுவை தொகையை செலுத்தி குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பை துண்டிக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

The post வரிஇனங்களை செலுத்தி குடிநீர் இணைப்பு துண்டிப்பை தவிர்த்திடுவீர் appeared first on Dinakaran.

Related Stories: