தேனி, மார்ச் 23: இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிகளுக்கு ஆட்சேர்ப்பு நடக்க உள்ளதால், இப்படைப்பிரிவில் சேர விருப்பமுள்ளவர்கள் வருகிற ஏப்ரல் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பொதுப்பணியாளர், அக்னிவீர் தொழில்நுட்பம், அக்னிவீர் எழுத்தர், கிடங்கு மேலாளர், அக்னிவீர்தொழிலாளி ஆகிய பணியிடங்களுக்கு தமிழ்நாட்டில் உள்ள கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், நாமக்கல், நீலகிரி, மதுரை, தேனி மற்றும் தர்மபுரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் உள்ள விண்ணப்பதாரர்கள் www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் இப்பணிகளுக்கு இரண்டு பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்போர் 1.6 கிமீ பரிசோதனை ஓட்டம் 5 வினாடிகளில் இருந்து 45 வினாடிகளில் இருந்து 6 நிமிடம் 15 வினாடிகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது. என்சிசி, ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும். நுழைவுத்தேர்வு தமிழ் உள்பட 13 மொழிகளில் நடத்தப்படும். முதலில் ஆன்லைன் பொதுத் தேர்வு நடக்கும்.
இதன்பின்னர், ஆட்சேர்ப்பு முகாம் நடத்தப்படும். தேர்வு தேதிகள் விரைவில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அறிவிக்கப்பட உள்ளது. இந்திய ராணுவத்தில் தேர்ந்தெடுக்கப்படுவது முற்றிலும் வெளிப்படையானது மற்றும் திறமையை அடிப்படையாகக் கொண்டது.
மேலும், ஆட்சேர்ப்பு முகவர்களை யாரும் நம்ப வேண்டாம் என கோயம்புத்தூர் ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விபரங்களை www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலம் அறிந்து கொள்ளலாம்.
The post இந்திய ராணுவத்தில் அக்னிவீர் பணிக்கு ஆட்சேர்ப்பு appeared first on Dinakaran.