இயக்குனர் ஆகிறார் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா

பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா, தன் தந்தை வழியில் இயக்குனர் ஆகிறார். இப்படத்தை இயக்குனர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை ஆமைக்கிறார். முக்கிய வேடத்தில் பாரதிராஜா நடிக்கிறார். இப்படத்துக்கு ‘மார்கழி திங்கள்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதில் ஷியாம் செல்வன் என்பவரை ஹீரோவாகவும், ரக்‌ஷனா என்பவரை ஹீரோயினாகவும் மனோஜ் பாரதிராஜா அறிமுகப்படுத்துகிறார். இதுபற்றி பாரதிராஜா கூறுகையில், ‘வழக்கமாக நான் அறிமுகப்படுத்தும் ஹீரோயின்களுக்கு, ஆங்கிலத்தில் ‘ஆர்’ என்று தொடங்கும் வகையில் பெயர் சூட்டுவேன். அதில் சிலர் மட்டும் விதிவிலக்கு. இப்போது என் மகன் மனோஜ் இயக்குனராகும் படத்தில் அறிமுகமாகும் ஹீரோயினுக்கு, ‘ஆர்’ என்ற எழுத்தில் தொடங்கும் விதமாக ‘ரக்‌ஷனா’ என்று பெயரிட்டுள்ளேன்’ என்றார்.

The post இயக்குனர் ஆகிறார் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதிராஜா appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.

Related Stories: