இதில் கோயில் மண்டபத்தில் சுவாமி சிலைகளையும் வைத்து காட்சி அரங்கம் அமைத்திருந்தனர். இந்த அலங்காரம் அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. ஆனால் திடீரென நேற்று எவ்வித முன்னறிவிப்பும் இன்றி குறிப்பாக நன்கொடையாளருக்கு தெரிவிக்காமல் அனைத்து அலங்கார சிலைகளையும் தேவஸ்தான ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். அவற்றை டிராக்டரில் ஏற்றிச்சென்றனர். இதுகுறித்து தகவலறிந்த நன்கொடையாளர் கோயில் வளாகத்தில் திரண்டார். அங்கு வந்த தேவஸ்தான அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தார். நன்கொடையாளர் கூறுகையில், அதிகாரிகளின் செயல் மோசமாக உள்ளது. எங்களுடைய மன உணர்வு, பக்தி, கடவுள் மீது கொண்ட அன்பு ஆகியவற்றை தேவஸ்தான அதிகாரிகள் புண்படுத்தி விட்டார்கள் என்றார். அவரை தேவஸ்தான அதிகாரிகள் சமாதானப் படுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
The post ஏழுமலையான் கோயிலில் மலர் அலங்காரத்துடன் வைத்த சுவாமி சிலைகள் திடீர் அகற்றம்: திருப்பதியில் பரபரப்பு appeared first on Dinakaran.
