காரைக்குடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி

காரைக்குடி, அக். 5: காரைக்குடி-திருச்சி ரயில் பாதையில் நேமத்தான்பட்டியில் ஆளில்லா லெவல் கிராசிங் அருகே நேற்று காலை சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்து கிடந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். உயிரிழந்த வாலிபரின் அருகில் ஒரு டிராவல் பேக் கிடந்தது. மேலும், அந்த வாலிபர் குறித்த விபரங்கள் ஏதும் தெரிய வரவில்லை. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அவர் லெவல் கிராசிங்கை கடந்தபோது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தாரா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

The post காரைக்குடி அருகே ரயில் மோதி வாலிபர் பலி appeared first on Dinakaran.

Related Stories: