கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது

பெரம்பூர்: வியாசர்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் காலை மது கடைகள் திறப்பதற்கு முன்பு மதுபானம் விற்கப்படுவதாக வியாசர்பாடி இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் போலீசார் வியாசர்பாடி திடீர் நகர் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான நபர் ஒருவரை பிடித்து அவரை சோதனை செய்தபோது சுமார் 15 மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெய் சுந்தர் (35) என்பதும், மது பாட்டில்களை வாங்கி வைத்துக்கொண்டு காலை மதுக்கடை திறப்பதற்கு முன்பு கூடுதல் விலைக்கு விற்று வந்ததும் தெரிய வந்தது இதையடுத்து ஜெய் சுந்தர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: