மூதாட்டிக்கு பாலியல் தொல்லை ரவுடி கைது

பெரம்பூர்: புளியந்தோப்பு சுந்தரபுரம் பகுதியை சேர்ந்தவர் கலா (60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மற்றும் மகன் ஆகியோர் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணி அளவில் கலா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, இவரது வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். உடனே கலா அலறி கூச்சலிடவே அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பினார். போலீசார் விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவை சேர்ந்த சூர்யா (எ) துண்டு பீடி சூர்யா (22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்தனர்.

The post மூதாட்டிக்கு பாலியல் தொல்லை ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: