பெண்ணுக்கு பாலியல் தொல்லை ரவுடி கைது

மாதவரம்: புளியந்தோப்பு சுந்தரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கலா (60, பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மாதவரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இவரது மகள் மற்றும் மகன் தனியாக வசித்து வருகின்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு கலா வீட்டில் தனியாக தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், கலாவை பலாத்காரம் செய்ய முயன்றார்.

உடனே கலா கூச்சலிடவே அவர் அங்கிருந்து ஓடினார். இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசாரின் விசாரணையில், புளியந்தோப்பு சுந்தரபுரம் 4வது தெருவை சேர்ந்த சூர்யா (எ) துண்டு பீடி சூர்யா (22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இவர் மீது ஏற்கனவே 7 குற்ற வழக்குகள் இருப்பதும் தெரிய வந்தது. அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post பெண்ணுக்கு பாலியல் தொல்லை ரவுடி கைது appeared first on Dinakaran.

Related Stories: