முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு

பெரம்பூர்: வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 1வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் முருகா (30). இவர் லோடுமேனாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை 5 மணி அளவில் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் ஒன்றாவது குறுக்கு தெரு சந்திப்பு அருகே நின்று கொண்டிருந்தார். அப்பொழுது மது போதையில் அங்கு வந்த சுமார் 5க்கும் மேற்பட்டோர் முருகாவை சரமாரியாக வெட்டினர். இதில் கண் மற்றும் முகத்தில் பலத்த காயமடைந்த முருகா சம்பவ இடத்திலேயே மயக்கம் அடைந்தார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் விசாரணை நடத்தியதில் வியாசர்பாடி எம்ஜிஆர் நகர் 4வது தெருவை சேர்ந்த வாசுதேவன் (22) என்ற நபர் அவரது நண்பர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவரை முன்விரோதம் காரணமாக வெட்டுவதற்காக வந்துள்ளனர். அவர் கிடைக்காததால் அந்த இடத்தில் இருந்த முருகா என்பவரை வெட்டி விட்டு சென்றதும், செல்லும் போது 2 ஆட்டோ மற்றும் ஒரு பைக்கின் கண்ணாடிகளை அடித்து சேதப்படுத்தி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து எம்கேபி நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவன் மற்றும் அவருடன் வந்த நபர்களை தேடி வருகின்றனர்.

The post முன்விரோதத்தில் வாலிபருக்கு வெட்டு appeared first on Dinakaran.

Related Stories: