பின்னர், தங்கதுரை கூறியபடி, தண்டையார்பேட்டை திருெவாற்றியூர் நெடுஞ்சாலை எம்.எம் தியேட்டர் எதிரே 4 ஏசிகளை இறக்கி வைத்துள்ளனர்.
மீதமுள்ள 2 ஏசிகளை அவரது கடைக்கு கொண்டு சென்றனர். கடை பூட்டி இருந்தது. தங்கதுரையை செல்போனில் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதையடுத்து கடை ஊழியர்கள் தண்டையார்பேட்டை எம்.எம் தியேட்டர் பகுதியில் வந்து பார்த்தபோது, அவர்கள் இறக்கி வைத்திருந்த 4 ஏசி மிஷின்கள் மாயமாகி இருந்தது. இதுகுறித்து தண்டையார்பேட்டை குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள தங்கதுரையை தேடி வருகின்றனர்.
The post ஆர்டர் செய்வதுபோல் நடித்து 4 ஏ.சி மிஷின்கள் அபேஸ்: கடை உரிமையாளருக்கு வலை appeared first on Dinakaran.