பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர், ஆக.26: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கிரேஸ் பச்சாவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 30ம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் அலுவலகக் கூட்டமன்றத்தில் நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில் வேளாண்மை சம்மந்தமான நீர்ப்பாசனம், வேளாண்மை கடன் உதவிகள், வேளா ண்மை இடுபொருட்கள், வேளாண்மை இயந்திரங் கள் மற்றும் விவசாயிகள் மேம்பாட்டிற்கான நலத் திட்டங்கள் பற்றிய முறை யீடுகள் பற்றி விவாதிக்கப்படும். விவசாயிகள் அன்றைய தினம் தங்களது குறைகளை தெரிவிக்க லாம் என மாவட்டக் கலெக்டர் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளார்.

The post பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: