உடையார்பாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்தநாள் விழா

 

ஜெயங்கொண்டம், செப்.17: உடையார்பாளையம் அரசு மகளிர்மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் அண்ணா பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமையாசிரியர் முனைவர் முல்லைக் கொடி தலைமை வகித்தார். ஆசிரியர் செல்வராஜ் வரவேற்றார், முன்னதாக, சமுகநீதிநாள் உறுதிமொழி எடுக்கபட்டது, அண்ணாவைபற்றி மாணவி தேவதர்ஷினி, அகஷ்யா ஆகியோர் பேசினர், தலைமையாசிரியர் அண்ணாவின் ‘கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்,

மேலும், மாவட்ட அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கேரம் போட்டியில் மாணவி அகல்யா இரண்டாமிடம் வெற்றி பெற்றதை தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர் பாராட்டினார்கள், அண்ணாவைபற்றிய கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. நிகழ்வில், ஆசிரியர்கள் மஞ்சுளா, பூசுந்தரி, அருட்செல்வி,இராஜசேகரன், சங்கீதா, சுரும்பார்குழலி, கவிதா,லூர்துமேரி, தமிழாசிரியர் இராமலிங்கம், உடற்கல்வி ஆசிரியர் ஷாயின்ஷா கலந்து ஆகியோர் கொண்டனர். முடிவில் கணித ஆசிரியர் தமிழரசி நன்றி கூறினார்.

The post உடையார்பாளையம் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அண்ணா பிறந்தநாள் விழா appeared first on Dinakaran.

Related Stories: