பெரம்பலூரில் பிரபல ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது

பெரம்பலூர், செப். 19: பெரம்பலூரில் பிரபல ரவுடியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர் புடைய ஒருவரை போலீ சார் கைதுசெய்தனர். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட துறை மங்கலம் கே.கே நகரைச் சேர்ந்த சார்லஸ் மகன் வினோத் (27). கடந்த 16ம் தேதி இரவு 7 மணியளவில் எளம்பலூர் சாலையில் உள்ள தியேட்டர் அருகே சந்துப் பகுதியில் நின்றுக்கொண்டிருந்த போது, 6 பேர்கள் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவிடத்திற்கு விரைந்து சென்று படுகாய மடைந்த வினோத்தை மீட்டு சிகிச்சைக்காக பெரம்ப லூர் மாவட்டஅரசுதலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

முன் விரோதம் காரணமாக பெரம்பலூர் வெங்கடேச புரம் காலணியை சேர்ந்த கண்ணன் மகன் பிரித்திகைவாசன் மற்றும் அவரது நண்பர் தேன் (எ) சரவணன் உட்பட 6 பேர் கொண்ட கும்பல் தன்னை வெட்டி விட்டு தப்பி சென்ற தாக வினோத் கூறியிருந் தார். இது குறித்து பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிந்து வழக்கில் தொடர்பு டைய பெரம்பலூர் எளம்ப லூர் சாலையைச் சேர்ந்த தேன் (எ) சரவணன் (28) என்ப வரை போலீசார் நேற்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

The post பெரம்பலூரில் பிரபல ரவுடி கொலை வழக்கில் வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: