பெரம்பலூரில் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் விழிப்புணர்வு ஊர்வலம்

 

பெரம்பலூர், செப்.18: பெரம்பலூரில் நகராட்சி நிர்வாகம் சார்பில் தூய்மை பணிகள் விழிப்புணர்வு குறித்து ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை ஆணையர் ராமர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் நகராட்சி நிர்வாகம் சார்பில் மத்திய அரசின் ஸ்வட்சதா தூய்மை இயக்கத்தின் கீழ் செப்17ம் தேதி முதல் அக்-2ம் தேதிவரை தூய்மை பணிகள் தொடர் பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இதன்படி நேற்று (17ம் தேதி) செவ்வாய்க் கிழமை காலை தூய்மை பணிகள் தொடர்பாக நடைபெற்ற விழிப்புணர்வு ஊர்வலத் திற்கு நகராட்சி ஆணையர் ராமர் தலைமை வகித்து, ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார். நகராட்சியின் சுகாதார அலுவலர் மூர்த்தி, சுகாதார ஆய்வாளர் மோகன், சுகாதார மேற்பார் வையாளர்கள் விநாயகம், கோபி, பாலு, குமரவேலு மற்றும் தூய்மை இந்தியா பரப்புரையாளர்கள் மற்றும் 150 தூய்மைப் பணியாளர் கள் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். ஊர்வலம் நகராட்சி அலுவலகத்தில் தொடங்கி பாலக்கரை வரை நடைபெற்றது.

The post பெரம்பலூரில் நகராட்சி சார்பில் தூய்மை பணிகள் விழிப்புணர்வு ஊர்வலம் appeared first on Dinakaran.

Related Stories: