பெரம்பலூர் அருகே கார் மோதி முதியவர் பலி: பேத்தி படுகாயம்

 

பெரம்பலூர், செப்.11: கரூர் மாவட்டம், கிருஷ்ண ராயபுரம், தண்ணீர் பாலம் பகுதியைச் சேர்ந்த கார் டிரைவரான, ஷெரீப்ஜான் மகன் நாசர்(29) என்பவர் நேற்று (10ம்தேதி) காலை சென்னையில் உள்ள தனது முதலாளியை அழைப்பதற்காக , கரூரில் புறப்பட்டு முசிறி, துறையூர் வந்து, பெரம்ப லூர் மாவட்டம் அம்மா பாளையம் வழியாக மேற் கிலிருந்து கிழக்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அதே திசையில் மேற்கிலிருந்து கிழக்காக தனியார் பெட்ரோல் பங்க் அருகே இருசக்க வாகனத்தில் சென்று கொண்டிருந்த பெரம்பலூர் மாவட்டம், அம்மாப் பாளை யம் கிராமத்தை சேர்ந்தவ சீராளன்(60), அவரது பேத்தியான 4 வயது குழந்தை ஹரிணி ஆகி யோர் கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருசக்கர வாக னத்தை ஓட்டி வந்த சீராளன் பலியானார்.

குழந்தைக்கு காலில் அடி பட்டதால் அப்பகுதியில் சென்றவர் உதவியால் மருத்துவமனையில் சேர்க் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறது. சம்பவம் குறித்துத் தகவல றிந்து அங்குவந்த பெர ம்பலூர் போலீசார், சீரளனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்ப லூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக வழக் குப் பதிவு செய்த பெரம்ப லூர் போலீசார் விபத்துக்குக் காரணமான கார் டிரைவர் நாசரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post பெரம்பலூர் அருகே கார் மோதி முதியவர் பலி: பேத்தி படுகாயம் appeared first on Dinakaran.

Related Stories: