பாடாலூரில் ஊட்டச்சத்து உணவு திருவிழா

 

பாடாலூர், செப். 18: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூரில் செயல்படும் மகளிர் திட்ட வளாகத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊட்டச்சத்து உணவு திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், சுமார் 27 மகளிர் குழுவினர் பங்கேற்று, உளுந்தங்கஞ்சி மற்றும் கேழ்வரகு, நவதானியங்கள், கீரை வகைகள், கிழங்கு வகைகள், இனிப்பு, காரம், காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் ஆகியவற்றால் பல்வேறு வகையான பாரம்பரிய உணவு வகைகளை தங்கள் வீடுகளில் தயார் செய்து கண்காட்சியில் வைத்தனர்.

இந்த உணவுகளில் உள்ள சத்துக்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கப்பட்டது. பொதுமக்கள் அனைவரும் துரித உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, குழந்தைகளின் வளர்ச்சிக்காகவும், சக்திக்காகவும் பாரம்பரிய உணவுகள் உட்கொள்வதை பின்பற்ற வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், இந்த திருவிழாவை ஏற்பாடு செய்ததாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
இதில் உதவி திட்ட அலுவலர்கள் பெர்லினா, முருகதாஸ், ஊராட்சி மன்ற தலைவர் காந்திமதி ஆசைத்தம்பி மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இயக்க மேலாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.

The post பாடாலூரில் ஊட்டச்சத்து உணவு திருவிழா appeared first on Dinakaran.

Related Stories: