புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார். இதுகுறித்து ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறுகையில், ‘மேற்குவங்க காங்கிரஸ் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு தேசிய தலைமை கேட்டுக் கொண்டது. எனது தலைமையில் கூட்டம் நடந்தது. இன்னும் நான் மேற்குவங்க காங்கிரஸ் தலைவராக உள்ளேன். கார்கே காங்கிரஸ் கட்சித் தலைவராக பதவியேற்ற நாளில் இருந்து, நாடு முழுவதும் பெரும்பாலான நிர்வாகிகளின் பதவிகளும் தற்காலிகமாகிவிட்டன. எனது பதவியும் தற்காலிகமாகிவிட்டது’ என்றார். முன்னதாக, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி உள்ளிட்ட மேற்கு வங்க மூத்த தலைவர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
The post மேற்குவங்க மாநில தலைவர் பதவி தற்காலிகமாகிவிட்டது: கார்கேவை விமர்சித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி appeared first on Dinakaran.