இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை

சோழிங்கநல்லூர்: அயனாவரம் பகுதியை சேர்ந்த 18 வயது இளம்பெண், கடந்த 6 மாதமாக, வினோத் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இந்த இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறிய வினோத், பலமுறை அவரை வெளியில் அழைத்து சென்று உல்லாசமாக இருந்துள்ளார். இதில் இளம்பெண் கர்ப்பமானார்.

இதுபற்றி வினோத்திடம் கூறிய இளம்பெண், தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியுள்ளார். அதற்கு வினோத், தனக்கு ஏற்கனவே திருமணமாகி, ஒரு பெண் குழந்தை இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த இளம்பெண், இதுபற்றி அயனாவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், வினோத் யார் என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post இளம்பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய வாலிபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: