கணவர் மறைவால் குடும்பம் நடத்த சிரமம் 3 பிள்ளைகளின் தாய் தூக்குப்போட்டு சாவு

கன்னியாகுமரி, ஜூன் 23: கன்னியாகுமரி பகுதியை சேர்ந்தவர் பிரேம்நாத். இவர் கடந்த 2020ம் ஆண்டு கொரோனா காரணமாக உயிரிழந்தார். இவரது மனைவி சகாய டென்ஸிலின் (46). இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் மகன் ஒருவர் மாற்று திறனாளி ஆவார். கணவர் இறப்புக்கு பின் சகாய டென்ஸிலின் குடும்ப வருமானத்துக்கு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார். மகளுக்கு திருமணமும் செய்து வைக்க முடியாத நிலை உண்டானது.

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சகாய டென்ஸிலின், நேற்று முன்தினம் (21ம்தேதி) வீட்டில் தூக்கு போட்டு தற்ெகாலை செய்து கொண்டார். இதை பார்த்து அவரது பிள்ளைகள் கதறினர். இந்த சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், கன்னியாகுமரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சகாய டென்ஸிலின் உடலை பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post கணவர் மறைவால் குடும்பம் நடத்த சிரமம் 3 பிள்ளைகளின் தாய் தூக்குப்போட்டு சாவு appeared first on Dinakaran.

Related Stories: