நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜூன் 28: ஒன்றிய அரசை கண்டித்து திருவாரூரில் விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வில் நடைபெற்றுள்ள முறை கேட்டிற்கு காரணமான ஒன்றிய அரசை கண்டித்தும், நீட் தேர்வினை முழுமையாக ரத்து செய்யக் கோரியும் திருவாரூரில் நேற்று ரயில் நிலையம் முன்பாக விடுதலை தமிழ் புலிகள் கட்சியினர்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சியின் நிறுவன தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பாரதி மற்றும் பொறுப்பாளர்கள் சேவியர், சுரேஷ், வெங்கடேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: